பொழுதுகள் கரைந்தோடினாலும்
எத்தனை விடியல்கள்
இரவுகள் தாண்டிச்சென்றாலும்
கானலான நினைவுகளை
அழிப்பதற்கு இயலவில்லை
இப்போதெல்லாம் என்னிடம்
பேசுவதற்கு கூட யாருமில்லை
ஏதோ ஒர் மூலையில்
உன் நினைவுகளும்,
வாழ்க்கை எனும் விருட்ச்சத்தின்
சில உறவுகள் மட்டுமே
என்னை தொடர்கின்றன,
தொடர்கதைக்குள்ளும் சிறுகதை
ஆகிப்போன என் வாழ்வும்
என்னில் வாழும்
உயிருமே எஞ்சியுள்ளது
பிரியும் வரை உன் உறவின்
அருமை புரியவில்லை
No comments:
Post a Comment